என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமநாதபுரம் டாக்டர் தற்கொலை"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் சுகந்தா வயது (31).
இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மகேஸ்வரன் மேல் மருத்துவ படிப்புக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும், பின்பு ஊர் வந்து சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்க சொல்லி டெல்லிக்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் அக்டோபரில் ராமநாதபுரம் வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு பிடித்து டாக்டர்கள் இருவரும் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வேலைக்கு போகக் கூடாது என்றும் மேல் படிப்புக்கு செல்லக்கூடாது என்றும், அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுகந்தா தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கிய அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
டாக்டர் மகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சுகந்தாவின் தாய் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்